‘நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல. இது ஜனநாயகத்திற்கு எதிரான போர், சுதந்திரத்திற்கு எதிரான போர் என்பதை புரிந்து கொள்ளும் வரை, வானத்தில் இருந்து நமது குடிமக்களை புடின் கொல்வதைத் தடுக்க முடியாது’ என மரியுபோல் மேயர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புக்கள் உக்கிர தாக்குதல்களை நடத்திவருவதால், உக்ரைனுக்குள் படைகளை அனுப்புமாறு நேட்டோ தலைவர்களை மரியுபோல் மேயர் செர்ஜி ஓர்லோவ் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா, எமது நாட்டை பாலைவனமாக்கி பல பொதுமக்களைக் கொல்லும் வரை நிறுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலின் தொடக்கத்திலிருந்து ரஷ்யப் படைகள், 30க்கும் மேற்பட்ட குடிமக்களின் தளங்களை குண்டுவீசித் தாக்கியுள்ளன என்று அந்நாட்டின் உட்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
எனினும் ‘ரஷ்யர்கள் தாங்கள் பொதுமக்கள் மீதோ பொருட்களையோ தாக்கவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் உக்ரைனின் வடக்கு செர்னிஹிவ் பிராந்தியத்தில் ரஷ்ய விமானப் படையினர் நடத்தியத் தாக்குதல்களில் 47பேர் உயிரிழந்துள்ளாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது முந்தைய எண்ணிக்கையான 33இல் இருந்து உயிரிழப்பு எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. உக்ரைனின் உள்ளூர் அவசர சேவைகளின் படி, கடுமையான ஷெல் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக
உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ர
இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட
"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல
மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்ன
ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தல
தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு
ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக
அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ
கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங
