இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி பாணந்துறை பிரதேசத்தில் பல இளைஞர், யுவதிகளை ஏமாற்றி பணம் பெற்ற நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபரொருவர் பாணந்துறையில் பணம் வசூலிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
மேலும், இந்த சந்தேக நபர் கனடாவில் வேலை பெறுவதற்கான ஒப்பந்தத்திற்காக சட்டத்தரணியுடன் வருமாறும், வரும் போது 5 லட்சம் ரூபாய் பணமும் கொண்டுவர வேண்டும் எனவும் அவரிடம் வரும் இளைஞர் யுவதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய விசாரணை அதிகாரி ஒருவர் சட்டத்தரணி போன்று நடித்து சந்தேக நபரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு சந்தேக நபர் தயாரான போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சுமார் 50 மில்லியன் ரூபாய் பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க
இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம
இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று
இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆ
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒர
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்க
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
