வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன்று நேற்று முன்தினம் பிற்பகல் வாத்துவ பிரதேசத்தில் கடை ஒன்றின் மீது மோதியதில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குரோஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்து நீர்கொழும்பில் தங்கியிருந்த தம்பதியினர் காலிக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த முச்சக்கரவண்டி பாணந்துறையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்துள்ளது.
பொஹத்தரமுல்ல தபால் நிலையத்திற்கு அருகில் உள்ள எதிர் பாதையில் குறித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகிச் சென்று கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், செங்கல் குவியலை இடித்து, கடையின் வாயிலை சேதப்படுத்தியது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் கடைக்கு 20,000 ரூபாய்க்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகிறது. இதன்படி கடை உரிமையாளரின் தயவில் இரு தரப்பினரும் உடன்படிக்கை செய்து வெளிநாட்டு தம்பதியினரின் வசமிருந்த 12,000 ரூபா நட்டத்தை செலுத்தியதையடுத்து, பொலிஸ் முறைப்பாடு எதுவுமின்றி தம்பதியினர் மகிழ்ச்சியுடன் வெளியேறினர்.
குறித்த விபத்தின் போது வெளிநாட்டு பெண்ணால் முச்சக்கரவண்டி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள ந
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய
கிளிநொச்சி ஏ9 வீதியில் பயன்படுத்தப்பட்ட காசோலைகள் வீச
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்
தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
