More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனா ஊரடங்கில் 1,400 கி.மீ சென்று மீட்ட மகன் இன்று உக்ரைனில் தவிப்பு ... தாயார் விடுத்த கோரிக்கை!
கொரோனா ஊரடங்கில் 1,400 கி.மீ சென்று மீட்ட மகன் இன்று உக்ரைனில் தவிப்பு ... தாயார் விடுத்த கோரிக்கை!
Mar 05
கொரோனா ஊரடங்கில் 1,400 கி.மீ சென்று மீட்ட மகன் இன்று உக்ரைனில் தவிப்பு ... தாயார் விடுத்த கோரிக்கை!

 கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ரஸியா பேகமும் ஒருவர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ரஸியா பேகம். கணவரை இழந்த இவர் தன் இரண்டு மகன்களுடன் தெலங்கானா மாநிலத்தில் வசித்துவருகிறார்.



கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கின்போது அண்டை மாநிலமான ஆந்திராவின் நெல்லூரில் சிக்கித் தவித்த தன் மகனை மீட்க, 1,400 கிலோமீட்டர் ஒற்றைப் பெண்ணாக மூன்று நாள்கள் பயணித்து, தன் மகனை அழைத்து வந்ததனால் அவர் அப்போது அதிகம் பேசப்பட்டார்.



இந்த நிலையில், தற்போது அவரின் 19 வயது மகன் உக்ரைனில் சிக்கியிருக்கிறார். கிழக்கு ஐரோப்பிய தேசத்தின் ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது சுமி.



அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படித்துவருகிறார் ரஸியா பேகத்தின் மகன் நிஜாமுதீன் அமான். நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துவரும் சூழலில், தன் மகனும் மற்ற இந்திய மாணவர்களும் பத்திரமாக நாடு திரும்பி வர வேண்டும் என ரஸியா பேகம் பிரார்த்தனை செய்வதாகக் கூறுகிறார் .



இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,



``சுமியில் மருத்துவம் பயிலும் என் மகனும், பிற இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும். இந்திய அரசு அதற்குரிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். என் மகன் நிஜாமுதீன் அமானும் இன்னும் சில மாணவர்களும் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கிறார்கள். என் மகன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னிடம் பேசினார். அப்போது தான் நலமாக இருப்பதாகவும், அவரைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார். ஆனாலும், பதற்றமாக இருக்கிறது. என் மகன் உட்பட இந்திய மாணவர்களை மீட்டுத்தர வேண்டும்" என அந்த தாயார் கோரிக்கை வைத்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப

Mar14

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால

Mar03

தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்

Apr04

தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சின

May16

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப

Aug22

திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர்

Oct03

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும

Sep19

மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க

Jul09

சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்

Aug09

கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம்

Aug01

ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய்

Aug19
Jan19

கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே

Nov21

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க

Jan17

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (23:31 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (23:31 pm )
Testing centres