ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜியா அணுஉலை நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள முக்கிய பகுதிகளில் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அணுமின் நிலையத்தில் இருந்து கதிர் வீச்சு கசிவு ஏற்படலாம் என்ற பெரும் பீதி நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஜபோரி ஜியா அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் ஆகும் . ரஷிய படை, ஜபோரி ஜியா அணுமின் நிலையத்தை கைப்பற்றி இருக்கும் நிலையில் மேலும் ஒரு அணுமின் நிலையத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் உள்ள 2-வது பெரிய அணுமின் நிலையம் யுஷ்னோக்ரைன்ஸ்க் நகரில் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தை குறி வைத்து தாக்குதல் நடத்த ரஷியா தயாராகி வருகிறது.
இந்நிலையில் தற்போது யுஷ்னோக்ரைன்ஸ்கில் உள்ள அணுமின் நிலையத்துக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் ரஷிய படைகள் உள்ளன. இதனால் விரைவில் 2-வது அணுமின் நிலையத்தையும் கைப்பற்ற தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது.
அதேவேளை அணுமின் நிலையம் அருகே துப்பாக்கி சூடு நடத்துவதை ரஷ்ய துருப்புக்கள் நிறுத்த வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம்
ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செ
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்ட
