உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதிகளை எந்த நாட்டவராக இருந்தாலும் ஜேர்மனி அழைத்துச் செல்லும் என்று ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் கூறியுள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து அண்டை ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து தப்பிச் செல்லும் எந்தவொரு அகதிகளையும் தங்க வைக்கும் ஜேர்மனியின் முடிவில் 'தேசியம்' ஒரு பங்கை வகிக்காது என்று உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் கூறியுள்ளார்.
"நாங்கள் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறோம். அது பாஸ்போர்ட்டைப் பொறுத்தது அல்ல" என்று ஃபேசர் கூறினார்.
உக்ரைனில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை தெரிவித்தது. அந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1.5 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம்
கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம
கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாது
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி
