குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை கட்டடத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.
குருநாகல் – புத்தளம் வீதியில் யந்தம்பலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனது மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தை திறந்து வைக்க வீதியை மாற்றி பிரதமர் பயணித்ததாக தெரிய வருகிறது.
பிரதமரின் பிரத்தியேக செயலாளர் ரோஹித ராஜபக்ஷவின் பங்கேற்புடன் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்து. எனினும் நேற்றைய தினம் ரோஹித ராஜபகஷ பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு பொறுப்பை ரோஹிதவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபைக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர், தனது ஒருங்கிணைப்புக் காரியாலயத்தை திறப்பதற்காக நாரம்மல-குருநாகல் பிரதான வீதிக்கு வரவிருந்தார். எனினும் எரிபொருள் வரிசைகளால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அதிவேக நெடுஞ்சாலை ஊடாக யந்தம்பலாவ சென்றடைந்துள்ளார்.
நாரம்மல பகுதியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பிரதமரின் வாகனத் தொடரணி அலவ்வ ஊடாக நாகலகமுவ அதிவேக வீதி நுழைவாயிலில் மத்திய அதிவேக வீதிக்குள் பிரவேசித்து யந்தம்பலாவை நோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழி
இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்- நாட்டில் பதிவாகும
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம
மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவ
இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப
இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ
