கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசு இந்திய அரசாங்கத்திடம் 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டில்லியில் உள்ள இலங்கை தூதர், சமீபத்தில் நாக்பூர் சென்று, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றது.நாட்டின் பொருளாதார நிலை மிக மோசம். இந்திய அரசு உதவ வேண்டும். அதற்கு, நீங்கள் தான் மேலிடத்தில் பேசி ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பாகவத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னொரு பக்கம், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், கொழும்பில் உள்ள இந்திய துாதரை அழைத்துப் பேசி அவரும், 15 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய அரசிடமிருந்து கடனாக பெற்றுத் தருமாறும் தூதரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
'ரஷ்யா - -உக்ரைன் போரால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர, பல கோடி ரூபாய் செலவு இருக்கும் நிலையில், இலங்கை கேட்கும் உதவியை எப்படி செய்ய முடியும்' என, மத்திய அரசின் அதிகாரிகள் கையை விரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தன்னை சந்தித்த இலங்கை தூதரிடம், தாங்கள் கேட்கும் அளவிற்கு உதவ முடியாவிட்டாலும், 'உதவி செய்கிறேன்' என பாகவத் வாக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத
தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர
மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச ப
மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க
ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட அ.தி.மு.க.  ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கட கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு
