இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என அறியமுடிகின்றது என ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து நீண்டகால மீட்சியை இலக்காகக்கொண்ட பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை சமர்ப்பிக்க இந்தியா கோரியுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதாரத் திட்டங்களைத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டு பட்டியலையும் இந்தியா கோரியுள்ளது என அறியமுடிகின்றது.
கடந்த வருடம் டிசம்பரில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொண்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய விஜயம் இரண்டு முறை இரத்துச் செய்யப்பட்டது.
இதன் காரணமாக உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு இன்னும் திட்டம் வகுக்கப்படவில்லை.
இலங்கை எடுத்த டிசம்பர் மாதக் கடனும் இந்த வாரத்தில் செலுத்தப்பட இருந்த நிலையில், பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பது, திருகோணமலைத் துறைமுகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா முன்வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்
இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வ
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்த
தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
