உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் கிவ் அருகே உக்ரைன் மேயர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, Hostomel மேயர் உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Hostomel நகரம் உக்ரேனிய தலைநகர் கிவ்வுக்கு அருகில் உள்ளது, மேலும் இது ரஷ்ய மற்றும் உக்ரேனிய படைகளுக்கு இடையேயான சண்டையின் மையத்தில் ஒரு முக்கிய மூலோபாய புள்ளியான Hostomel விமானநிலையத்திற்கு சொந்தமானது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பொது மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் போது யூரி பிரைலிப்கோ சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hostomel பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் "வீரமாக இறந்தார்" என்று கூறியுள்ளது. இந்நிலையில், போர் காரணமாக உடனடியாக இறுதிச் சடங்கு நடத்துவது சாத்தியமற்றது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருகிவரும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உக
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோ
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23ஆவது
அழகுக்காக செய்யப்படும் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையில
ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது
உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ்
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமய
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே
உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத
பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயத
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
