ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீழ்த்தப்படும் பல காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று உக்ரைன் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் சில வெளியாகியுள்ளன.
உக்ரைனிலுள்ள கார்க்கிவ் என்ற நகரில் இந்த காட்சிப் பதிவாகியுள்ளது.
வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யா, உக்ரைன் படைகளின் தாக்குதலில் தன் விமானங்களை இழந்துவருவதைக் காட்டும் காணொளிகள் வெளியானவண்ணம் உள்ளன.
தரையிலிருந்து வான் நோக்கிச் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளால் ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று தாக்கப்பட, அந்த விமானம் தீப்பிழம்புகளாகி வெடித்துச் சிதறி தரையில் விழுவதையும், அதைக் கண்ட உக்ரைன் வீரர்கள் உற்சாகக் குரல் எழுப்புவதையும் வெளியாகியுள்ள காணொளியில் காணக்கூடியதாகவுள்ளது.
மேலும், கார்க்கிவ் நகரிலுள்ள கட்டிடம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமரா ஒன்றிலும், ரஷ்ய விமானம் ஒன்று இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்படும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கார்க்கிவ் பகுதி கவர்னரான ஆல்யெக் சினிகுபோவ், ரஷ்யப் போர் விமானம் கார்க்கிவ் விமான பாதுகாப்புப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
அத்துடன், கார்க்கிவ் நகரில் சுற்றிச் சுற்றி வந்து, தொடர்ந்து குண்டு வீசிக்கொண்டிருந்த ஐந்து முதல் ஏழு ரஷ்ய விமானங்களில், இந்த விமானமும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
