2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கோப்பை வெல்வதற்கான ஆயத்த பணிகளை சென்னை அணி வீரர்களுடன் தோனி துவங்கியுள்ளார்.
2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்டது.
அதன்படி, வரும் மார்ச் 22ம் திகதி மும்மை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், குஜராத்தின் சூரத்தில் உள்ள லால்பாய் மைதானத்தில் சென்னை அணி, அதன் 2022 ஐபிஎல் தொடருக்கு முந்தைய பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.
சிஎஸ்கே கேப்டன் தோனி, லால்பாய் மைதானத்தில் உள்ள சென்னை அணி வீரர்களுடன் இணைந்து, 2022 ஐபிஎல் தொடருக்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளார்.
முன்னும் பின்னும் பைகளை மாட்டிக்கொண்டு, சிஎஸ்கே ஜெர்சியில் முகக் கவசம் அணிந்து கையை அசைத்த படி தோனி மைதானத்திற்குள் நுழையும் புகைப்படத்தை சென்னை அணி, அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
குறித்த புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை அணி, 2022 ஐபிஎல் தொடரிலும் வெற்றிப்பெற்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்
சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடை
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அண
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க
இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
