More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்
உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்
Mar 08
உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.



இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இப்போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.



இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.



தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்ற மாணவர் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



இது குறித்து மத்திய மாநில அரசுகள் விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.



கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் கடந்த 4 ஆண்டுகளாக உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் விமான பொறியியல் படித்து வருகிறார்.



இந்நிலையில், அவர் உக்ரைனின் ஜார்ஜியன் நேஷனல் லிஜியன் என்ற துணை ராணுவத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



உக்ரைனின் துணை ராணுவத்தில் சாய் இணைந்திருப்பது வேதனை அளிப்பதாகவும், அவரை மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பெற்றோர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.



மேலும், தனது சிறுவயதிலிருந்தே சாய் நிகேஷ் ராணுவத்தில் சேர விருப்பப்பட்டதாகவும், ஆனால், உயரம் குறைவு காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், இந்த நிலையில், அவர் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

நாகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி மாவட்ட

Feb04

இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு

Jan19

வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ

Jan24

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார

Sep18

பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற

Jun15

திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு

Sep22

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட

Sep15

மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை

Apr30

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்

Sep12

தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்

Jan30

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ந

Jul24

70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட

Aug04

பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள

Feb18

கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க

Aug12

தமிழகத்தில் 

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (08:43 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (08:43 am )
Testing centres