நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோக்களில் வெள்ளரிப் பழ வியாபாரிகளால் விற்பனை களை கட்டியுள்ளது.
வரட்சியான காலநிலை நிவுவதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப் பழ கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. தற்போது அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அத்துடன், 150 ரூபாய் முதல் சுமார் 350 ரூபாய் வரை வெள்ளரிப்பழம் பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளரிப்பழங்கள் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன் இவைகள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிந
காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனா
நேற்று இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆக
எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்
