முக்கிய நடிகை வைத்த பார்ட்டியில் கலந்து கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா !
Mar08
முக்கிய நடிகை வைத்த பார்ட்டியில் கலந்து கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா !
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் அடுத்து எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில், இயக்குனர் பாலாவின் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நடிகை ராதிகா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார், அவரின் வீட்டில் நடந்த பார்ட்டியில் சினிமா துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் அந்த பார்ட்டியில் நடிகர் சூர்யா அவரின் மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ராதிகா அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் பல வருடங்கள் கழித்து சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.