தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளில் பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படும் என அந்த நாட்டின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது மூன்றாவது மாதமாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் ராணுவ தாக்குதலானது உக்ரைன் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
அந்தவகையில் உக்ரைனின் 2000 ராணுவ வீரர்கள் மற்றும் 1000 பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பதுங்கி இருந்த மரியுபோல் நகரின் இரும்பு ஆலையை ரஷ்ய ராணுவத்தினர் நேற்று முதல் தாக்க தொடங்கியுள்ளனர்.

நேற்று ஆலைக்குள் பதுங்கி இருந்தவர்கள் சிலரை உக்ரைன் ராணுவத்தினர் வெளியேற்றியதை தொடர்ந்து, இந்த தாக்குதலை ரஷ்ய ராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளில் உள்ள உக்ரைனிய பொதுமக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படும் என உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வெளியேற்றமானது, இரண்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்றும், அவற்றில் Melitopol மற்றும் Berdyans'k இடையே ஒரு நகரமான Tokmak-கில் மாலை 3 மணிக்கும், Zaporizhzhia பகுதியில் உள்ள Vasylivka-கில் மாலை 4 மனிக்கும் மேற்கொள்ளபடும் என தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ள
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி
இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்
ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ
உலகளவில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்ப
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு
