பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்று பாட்டு பாடி காசு வாங்கிய சம்பவம் நடந்திருக்கிறது.
பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஃபரா கானின் தி கத்ரா கத்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியை பார்தி சிங் தொகுத்து வழங்குகிறார்.
பார்தியுடன் சேர்ந்து சாலையில் காசு வாங்கிவிட்டு வரும் டாஸ்கை சாராவுக்கு ஃபரா கான் கொடுத்தார் .
இதையடுத்து பார்தி சிங்குடன் தெருவுக்கு வந்த சாகா அலி கான், காசு கொடுத்தால் என்னுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து இரண்டு பேர் வந்து 20 ரூபாய் கொடுக்க சாரா அலி கான் அதை வாங்க மறுத்துவிட்டார்.
பின்னர் ரிக்ஷா ஓட்டிச் சென்றவரை நிறுத்தி பணம் கேட்க, என்கிட்ட ஏது மேடம் பணம் என்று அவர் சாராவிடம் கூறியுள்ளார்.
இறுதியில் ஒருவர் 100 ரூபாய் கொடுத்து சாராவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தார். மற்றொருவரோ 500 ரூபாய் கொடுத்து சாராவை பாட்டு பாடச் சொன்னார்.
அவரும் காசை வாங்கிக் கொண்டு பாட்டு பாடினார். மேலும் சாரா அந்த வழியாக பைக்கில் வந்தவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றார்.
இதேவேளை, சாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் அத்ரங்கி ரே. ஆனந்த் எல். ராய் இயக்கிய அந்த படத்தில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தார் சாரா என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹி
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள
அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
இயக்குனர் பாரதிராஜா உடல்நல குறைவு காரணமாக தற்போது மரு
முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச
