தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன்பாஸ்சில் நிலைகொண்டுள்ள படையினரும் தன்னார்வலர்களும் போராடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரஷ்யா மீதான படையெடுப்புக்கு மேற்குலக நாடுகள் தயாராகி வருவதாக ரஷ்ய அதிபர் குற்றஞ்சாட்டியு்ளளார்.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் நாசி ஜெர்மனியை வென்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றிவிழா அணிவகுப்பு சிவப்பு சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த வெற்றிவிழாவில் உரையாற்றிய விளாடிமீர் புடின், நேட்டோ இராணுவ கூட்டணி, ரஷ்யாவிற்கு வெளிப்படையான அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை அவசியமானது எனவும் படை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு மேற்கொண்ட தீர்மானம் சரியானது எனவும் விளாடிமீர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் யுத்தத்தால் துன்பப்படும் குடும்பங்களுக்கு தமது அரசாங்கம் அனைத்தையும் மேற்கொள்ளும் என ரஷ்ய அதிபர் உறுதி அளித்துள்ளார்.
ஒவ்வொரு இராணுவ வீரர் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள் வேதனை அளிக்கின்றது எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்தில் இருந்த வீரர்களின் ஆரவாரம் மற்றும் ரஷ்ய தேசிய கீதத்துடன் விளாடிமீர் புடின் தனது உரையை நிறைவுசெய்துள்ளார்.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழு
அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில்
உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நட
பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந
தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற
இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு
மியான்மரில் 76 ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத
மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் ச
உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே
மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தத