இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கேல் பேச்லெட் (Michelle Bachelet) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட அவர்,

"நேற்று கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் வன்முறைகள் அதிகரித்ததைக் கண்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.
அனைத்து வன்முறைகளையும் நான் கண்டிப்பதோடு, நடந்த அனைத்து தாக்குதல்களையும் சுதந்திரமாகவும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாக நிறுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் உட்பட அதிகாரிகள், நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அவசரகாலச் சூழலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மக்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களை முன்னோக்கி செல்லும் பாதையைக் கண்டறிவதற்கு சமூகத்தின் அனைத்துப் பகுதிகளுடனும் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நீண்ட காலமாக பாகுபாடுகளை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் மற்றும் மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பரந்த அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான அடிப்படைக் காரணங்களைத் தீர்க்குமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்", எனக் குறிப்பிட்டார்.
ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்த
இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக
உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசி ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ் அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக உக்ரைனுக்கு எதிராக போரிட்டுவரும் ரஷ்யாவுக்கு எந்தவி
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
