தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் தமது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை நேற்று வெளியிட்டுள்ள திணைக்களம், இலங்கையில் தற்போது நிலவும் நிலைமை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு பயணம் செய்வதற்கான உங்கள் தேவையை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் இப்போது உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
பாரிய ஆர்ப்பாட்டங்களின் போது பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே இலங்கையில் உள்ள தமது குடிமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும்.
இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகளின் உத்தரவுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
எல்லா நேரங்களிலும் உங்களுடன் தொடர்புடைய பயண மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள். இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அவை போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும். எரிபொருள் விநியோகத்தில் இடையூறு மற்றும் திட்டமிட்ட, நீண்ட மின்சார தடைகளை நீங்கள் சந்திக்கலாம்.
சில மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு உங்களை பாதிக்கலாம் என்றும் அவுஸ்திரேலியா தமது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி ச
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீ
துப்பாக்கி கலாசாரத்துக்கு எ
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலா
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ
கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாம
மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்
யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற ந
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-
