கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர முயற்சியில் ரஷ்ய படைகள் கடந்த பல நாட்களாக இறங்கி உள்ளன.
இந்த நிலையில் ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க உக்ரைனிய படைகள் ஆற்று பாலமொன்றை அழித்ததால், ரஷ்யாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலியாகி விட்டதாக சர்வதேச தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் வழியாக சிவர்ஸ்கி டொனெட்ஸ் என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு மிதக்கும் பாலம் இருந்து வந்தது.
ஆற்றைக் கடந்து வருவதற்கு இந்த பாலம் ரஷ்ய படைகளுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. இதை அறிந்து நோட்டமிட்டு வந்த உக்ரைன் படையினர் அந்தப் பாலத்தை அதிரடியாக தாக்கி அழித்தபோது, ரஷ்யாவின் ஒரு படைப்பிரிவினர் ஆற்றில மூழ்கி பலியாகி விட்டதாக உக்ரைன் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலத்தின் அருகே நிறுத்தப்பட்ட இராணுவ வாகனங்களையும் உக்ரைன் படையினர் தாக்கி அழித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று கூறுகையில்,
“ரஷ்யா குறைந்தபட்சம் ஒரு படைப்பிரிவை இழந்துள்ளது” என தெரிவித்தது. இந்த பாலத்தை அழித்ததையொட்டிய படங்களை உக்ரைன் வான்வழிப்படைகள் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே உக்ரைன் அதிகாரிகள், கருங்கடலில் ரஷ்ய கப்பல் ஒன்றை தங்கள் படையினர் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உக்ரைனுக்கு முக்கிய வெற்றி ஆகும்.
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த
சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை
ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர
உலகம் முழுவதும் நேற்று முன்தினம் சர்வதேச மகளிர் தினம்
பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில்
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நி
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு
