எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக, இலங்கை, இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் விபரங்களை கோரியுள்ளது.
இலங்கையில் மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி 2022ஆம் ஆண்டு மே 13ஆம் திகதியன்று தெ இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தகவல் குறித்து, இந்திய புலனாய்வுப் பிரிவினர், விசாரணை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிப்பார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் ஏனைய அனைத்துத் தகவல்களும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
அதேநேரம், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி
நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்
கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப
புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம
உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய
எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி
வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
