31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஸ ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.
இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஸ 109 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் வாக்கெடுப்பில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் சார்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்தார்.
அத்துடன், வாக்கெடுப்பின் போது எந்தவொரு தரப்பினருக்கும் வாக்களிக்காமல் செயற்பட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.
அதேசமயம் வாக்களிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்ட தரப்பில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குகளை செலுத்தியிருந்தனர்.
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில
மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத
ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னா
இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத வி
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உள
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர
