யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில்அனுமதிக்கப்பட்டிருப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் இன்று நள்ளிரவு (17-05-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து தெரியவருவது,
ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இருவரும் பயணித்த நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் எதிரே மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் இரண்டும் தீ பற்றி எரிந்த நிலையில் அயலவர்கள் கூடி தீயினை அணைத்து, பாடுகாயமடைந்த மூவரை நோயாளர் காவுவண்டியை அழைத்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து, தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேவேளை, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்
போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதே
யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மற
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமி
