ஈரானிய கால்பந்தாட்ட அணியினர் கனடாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கனேடிய கால்பந்தாட்ட நிறுவனம் நல்லெண்ண அடிப்படையில் ஈரான் கால்பந்தாட்ட அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஜோன் ஹெர்மன்ட் தலைமையிலான கனேடிய கால்பந்தாட்ட அணி உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வான்கூவாரில் எதிர்வரும் மாதம் ஈரான் அணியுடன் கனேடிய அணி நட்பு ரீதியான கால்பந்தாட்டப் போட்டியொன்றில் பங்கேற்ற திட்டமிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் உக்ரைன் விமானமொன்றை ஈரான் படையினர் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் 176 பேர் கொல்லப்பட்டதுடன் இதில் 50 பேர் கனேடிய பிரஜைகள் என்பதுடன் மேலும் 30 பேர் கனேடிய நிரந்தர வதிவிடவுரிமை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஈரான் அணியுடன் போட்டி நட்பு ரீதியான போட்டி நடாத்துவதற்கு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஈரானிய அணிக்கு அழைப்பு விடுக்க எடுத்த தீர்மான்னம் பொருத்தமானது என கருதவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி
இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்
துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் க
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டா
இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
