ஈரானிய கால்பந்தாட்ட அணியினர் கனடாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கனேடிய கால்பந்தாட்ட நிறுவனம் நல்லெண்ண அடிப்படையில் ஈரான் கால்பந்தாட்ட அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஜோன் ஹெர்மன்ட் தலைமையிலான கனேடிய கால்பந்தாட்ட அணி உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வான்கூவாரில் எதிர்வரும் மாதம் ஈரான் அணியுடன் கனேடிய அணி நட்பு ரீதியான கால்பந்தாட்டப் போட்டியொன்றில் பங்கேற்ற திட்டமிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் உக்ரைன் விமானமொன்றை ஈரான் படையினர் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் 176 பேர் கொல்லப்பட்டதுடன் இதில் 50 பேர் கனேடிய பிரஜைகள் என்பதுடன் மேலும் 30 பேர் கனேடிய நிரந்தர வதிவிடவுரிமை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஈரான் அணியுடன் போட்டி நட்பு ரீதியான போட்டி நடாத்துவதற்கு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஈரானிய அணிக்கு அழைப்பு விடுக்க எடுத்த தீர்மான்னம் பொருத்தமானது என கருதவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா
தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்
ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க
ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட
