கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைதானோர் எண்ணிக்கை 664 ஆக அதிகரித்துள்ளது.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 67 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 206 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவர்களில் 272 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைதானவர்கள்மீது சட்டவிரோதமாக கூடுதல், தாக்குதல், காயம், சொத்துக்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.
இதேவேளை, சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 791 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , அவற்றில் மேல் மாகாணத்தில் இருந்து 444 முறைப்பாடுகளும், தென் மாகாணத்தில் இருந்து 118 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளி
” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிம
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பத
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர
சந்தையில் தேங்காயின் விலையும் 10 முதல் 15 ரூபாவினால் அ
நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற
இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ
