உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்குள் மறைந்திருந்த வீரர்களை வெளியேற்ற சம்மதித்த ரஷ்யா, அவர்களை உக்ரைன் வீரர்களிடம் பிடிபட்ட ரஷ்யப் படையினருக்கு பதிலாக, உக்ரைனிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்திருந்தது.
ஆனால், செய்த ஒப்பந்தத்தை மீறி, இப்போது தங்களிடம் இருக்கும் உக்ரைன் வீரர்களை விட மறுத்துவிட்டது ரஷ்யா.
அத்துடன், ரஷ்யப் படைகளிடம் சிக்கியுள்ள உக்ரைன் படைவீரர்களை நாஸி போர்க் குற்றவாளிகள் என ரஷ்யா விமர்சித்துள்ளதுடன், அவர்களை உக்ரைனிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் வகையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர இருப்பதாக ரஷ்ய நாடாளுமன்றமும் அறிவித்துள்ளது.
மரியூபோலில் இருந்து உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் இன்னமும் ரஷ்ய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ரஷ்ய நாடாளுமன்ற தலைவரான Vyacheslav Volodin என்பவர், மரியூபோல் உருக்காலையிலிருந்து விடுவிக்கப்பட்ட உக்ரைன் வீரர்களை உக்ரைனிடமிருக்கும் ரஷ்ய வீரர்களுக்கு பதிலாக விடுவிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
அத்துடன், உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவரான அவரது சக நாடாளுமன்ற உறுப்பினரான Leonid Slutsky என்பவர், மரியூபோல் உருக்காலையிலிருந்து வெளியேற்றப்பட்ட உக்ரைன் படையினர் மனித உருவம் கொண்ட மிருகங்கள் என்றும், அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய
அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில்
ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ
2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஷேல் கேஸ் (களிப்பா
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாட
உக்ரைனின் தெற்குப் பகுதியான கெர்சன் நகரைக் கைப்பற்றி
ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்யப் பட
இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
சீனாவை சேர்ந்த சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூ
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்
