More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மகிந்த சகோதரர்கள் இடையில் வெடித்தது பாரிய பிளவு
மகிந்த சகோதரர்கள் இடையில் வெடித்தது பாரிய பிளவு
May 19
மகிந்த சகோதரர்கள் இடையில் வெடித்தது பாரிய பிளவு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா் ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் உள்ளன.



இந்தநிலையில், 1939ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பை போன்று குழு முறை அமைக்கப்பட்டு, அமைச்சர்கள் தெரிவுசெய்யப்பட்டால், தேசிய ஐக்கிய அரசாங்க அமைப்பின் ஊடாக செயற்படமுடியும் என்று முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச யோசனை வெளியிட்டுள்ளார்.



இது தொடர்பில், புதிய அரசியலமைப்புக்குள் திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



 



நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த அவர், பொருளாதாரம் தொடர்பில், அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



1994ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளராக செயற்பட்டார்.



இதன் காரணமாக 2001ஆம் ஆண்டு, மறை பொருளாதாரத்தை இலங்கை பெற்றது. 2005ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.



இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு இலங்கை, கடன் பொருளாதாரத்தை பெற்றது.



இதன்பின்னர் 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தவினால் இலங்கைக்கு திவால் பொருளாதாரம் கிடைத்தது என்று சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.



இதேவேளை அலரிமாளிகையில் இருந்து காலிமுகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்த சென்றவர்களை ஏன் பொலிஸ் தடுக்கவில்லை என்று ஏன் கேள்வி எழுப்பினார்.



இந்தநிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமது இரண்டு  தவணை ஜனாதிபதி பதவிக் காலத்தின் பின்னர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றிருக்கவேண்டும்்.



இதுவே சிறந்த செயற்பாடாக இருந்திருக்கும்.  இன்றைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.



இன்று அவர் 50 வருட அரசியல் வாழ்க்கையில் செய்த அர்ப்பணிப்புக்கள் எல்லாமே இல்லாமல் போயுள்ளன.



எனவே அரசியலில் பதவியை ஏற்றுக்கொள்கின்ற அதேநேரம் விட்டுக்கொடுக்கவும் பழகவேண்டும் என்று சம்ல் ராஜபக்ச  தெரிவித்தார்.



இதற்கிடையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மிகவும் ராசியானவர் என்றும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட

Oct03

மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந

Oct24

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க

Mar21

நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ

Feb06

நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்கு

Mar03

அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றி

Aug27

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு

Oct22

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன

Feb20

 அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர

May22

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார

Sep25

கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி

Feb04

ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அ

Jan27

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி

Oct02

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தான

Mar08

ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (06:22 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (06:22 am )
Testing centres