களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் தனது வீட்டில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வட்டிக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவர் இந்த முடிவை எடுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் களுத்துறை, கமகொட, ஹொரதுவாவத்தையைச் சேர்ந்த நதோஷ் குமார ஜயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு மூன்று மகன்கள் இருப்பதாகவும் அவர்களில் இருவர் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி அண்மையில் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் களுத்துறையில் கடலை வியாபாரியாக தொழில் செய்து வந்ததாகவும், அவருக்கு கிடைத்த சுனாமி வீட்டையும் கடன் காரணமாக வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
களுத்துறை நாகொட திடீர் மரண விசாரணை அதிகாரி சுமித் சில்வா முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி
கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூப
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க
