ஐரோப்பிய நாடான நார்வேவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் மூவர் காயங்களுடன் தப்பியுள்ள நிலையில், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் ஒஸ்லோவின் வடகிழக்கில் அமைந்துள்ள நோர் கிராமத்தில் தொடர்புடைய கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
நடந்த தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளனர் என உள்ளூர் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், காயமடைந்த நபர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் வில் மற்றும் அம்புகள் மற்றும் கத்திகளால் ஒருவர் வழிபோக்கர்களைத் தாக்கிய சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதுடன், நால்வர் லேசான காயங்களுடன் தப்பினர்.
குறித்த சம்பவத்தில் Andersen Bråthen என்பவர் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது. மேலும் அவர் அவர் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொ
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில்
ஈரானின் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதித
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவி
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ
இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
