More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்
ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்
May 23
ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்

ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



ராஜஸ்தான் மாநிலம் ஜான்வர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு 14 வயதில் திருமணம் நடந்துள்ளது. அதன்பின் திருமணமான 3 ஆண்டுகளில் தனது கணவரின் தங்கையை கொலை செய்த குற்றத்துக்காக ஜோத்பூர் நகரின் மாண்டோரில் உள்ள சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.



இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் ஜான்வர் பகுதியில் அப்பெண்ணின் பெற்றோரிடம் அக்குழந்தை வளர்ந்து வந்துள்ளது. இதனிடையே தன் குழந்தையைப் பார்ப்பதற்காகக் கடந்த மே 20 ஆம் தேதி இரவு சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தப்பி சென்றுள்ளார். 



ஜான்வருக்கு செல்ல ஜோத்பூரில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் அங்குள்ள சாலையில் காத்திருந்துள்ளார். அப்போது குல்தீப் பிஷ்னோய் (23) என்ற இளைஞன் அந்த பெண் பேருந்து நிலையத்துக்குச் செல்ல உதவுவதாகக் கூறி தனது வாகனத்தில் லிப்ட் கொடுத்துள்ளார். ஆனால் பேருந்து நிலையம் செல்லாமல் அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 



பின்பு அந்த பகுதியிலிருந்த பாலத்துக்கு அருகில் அந்தப் பெண்ணை இளைஞர் இறக்கிவிட்டுள்ளார். அந்த பாலத்துக்கு அருகில் என்ன செய்வது எனத் தெரியாமல் நின்ற அந்த பெண்ணுக்கு உதவுவதாக ஓட்டுநர் பாபுராம் ஜாட் (22) என்பவர் அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுத்துள்ளார்.



ஆனால் அவரும் அந்த பெண்ணை கைலானா ஏரிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் மே 21 ஆம் தேதி காலை 5.30 மணியளவில் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார். கடைசியாக வீட்டுக்கு வந்த பெண்  தனது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூற அவர்கள் மாண்டோர்  காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து பிஷ்னோய் மற்றும்  பாபுராம் ஜெட் இருவரும் கைது செய்யப்பட்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov12

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்

May13

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை

Jul16

கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி

May25

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட

Jun30

இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து

Mar26

உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்

Mar28

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே

Mar05

உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச

Oct15

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்

Jun07

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ

Jan29

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்

Feb15

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர

Jun12

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்

Apr12

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல்

Jan19

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்ன

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 01 (19:42 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 01 (19:42 pm )
Testing centres