உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் அதன் ஒன்பது ஆண்டு காலப் போரின் போது கண்ட அதே மரண எண்ணிக்கையை ரஷ்யா சந்தித்திருக்க வாய்ப்புள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய உளவுத்துறை புதுப்பிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான்பாஸ் தாக்குதலில் காணப்பட்ட உயர் விபத்து விகிதம், மோசமான தந்திரோபாயங்கள், மட்டுப்படுத்தப்பட்ட சுவாச பாதுகாப்பு, நெகிழ்வுத்தன்மை இல்லாமை மற்றும் தோல்வியை வலுப்படுத்த தயாராக இருக்கும் கட்டளை அணுகுமுறை ஆகியவற்றின் கலவையால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை, ரஷ்ய மக்களுக்கு மிகவும் வெளிப்படையாகத் தெரிகின்ற நிலையில், அவர்களுக்கு போரின் மீதான பொது அதிருப்தி மற்றும் அதை நிறுத்த குரல் கொடுக்கும் விருப்பம் வளரக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.இதேவேளை, ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போட முயன்ற ஆப்கான் மோதலில் சோவியத் யூனியன் குறைந்தது 15,000 வீரர்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி
ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும் உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுக மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் ச பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்
