சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ ஒன்று ஊடகங்களில் கசிந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஓடியோவில், 1.40 லட்சம் இராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், ரஷ்யா பாணியில் தைவான் மீது சீனா படையெடுப்பை நடத்துமோ என்ற அச்சம் தைவான் மக்களிடையே எழுந்துள்ளது.
சீனாவில் கடந்த 1949ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. இருப்பினும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.
மட்டுமின்றி, தேவையெனில் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது.
மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ வெளியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தைவான் மீது சீனா படை எடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் த
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட
வட கொரியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக போராட நாடு முழு
ரஷ்யாவின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் அசோவ்ஸ்
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
உலகம் முழுவதும்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தல ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை லண்டனில் வாழும் ரஷ்ய இளம்பெண் ஒருவர் வீட்டின் முன், ’ பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
