சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு சீனாவுடன் கலந்துரையாடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்க்ள் வெளியாகியுள்ளன.
அவசரகால தேவைக்காக டீசல் இருப்புக்களை வழங்குவதற்கு சீனா வழங்கிய சலுகைக்கு இலங்கை பதிலளிக்கவில்லை என தெரியவந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் விக்ரமசிங்க பதவியேற்பதற்கு முன்னர் இந்த சலுகை வழங்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள கையிருப்பில் இருந்து டீசலை வழங்க சீனா தயாராக உள்ளது.
எனினும் இலங்கையின் பதிலளிக்காத அணுகுமுறை சீன அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையில், சீனா EXIM வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிலுவைக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பாகவும், இலங்கையின் நிதி அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் சீனாவுக்கு வழங்கப்படவில்லை.
சீனா சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு (CIDCA) ஏற்கனவே 500 மில்லியன் ரென்மின்பி (renminbi) ரென்பின்மி என்பது சர்வதேச ரீதியில் சீனாவின் மத்திய நாணய பாிமாற்றத்துக்கான நாணயம்) அவசர உதவியாக வழங்கியுள்ளது.
இதேவேளை சீனாவிலிருந்து முதலாவது அரசி ஏற்றுமதி இலங்கைக்கு வரவுள்ள நிலையில், தேவையான மருந்துகளின் பட்டியலை வழங்குமாறு இலங்கையிடம் கோரப்பட்டுள்ளது.
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்த பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ விஷம் கொடுக்கப்பட்டு உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களு இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் அமெரிக்கா கிரீன் காட் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நட
