தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர் பற்றிய தகவல்களை கனேடிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமான சேவை நிறுத்தப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
விமானம் தாமதமான காரணத்தினால் மணப்பெண் விமான நிலையத்திலேயே உறங்க நேரிட்டதுடன், நிகழ்வில் பங்கேற்க முடியாது போயுள்ளது.
றொரன்டோவிலிருந்து பொனிக்ஸ் நோக்கிப் பயணிக்க வேண்டிய விமானம் இவ்வாறு தாமதமாகியுள்ளது.
முன்னதாக விமானம் தாமதமாக பயணம் செய்யும் என அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் விமானப் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை விமான சேவை நிறுவனம் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டோர்ர் அபுசாயிட் என்ற மணப்பெண்ணே இவ்வாறு தனது திருமணத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாது பாதிக்கப்பட்டவராவார்.
இதேவேளை, விமான பணியாளர் ஒருவருக்கு அவசர மருத்துவ தேவை ஏற்பட்ட காரணத்தினால் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான சேவை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
திட்டமிட்டிருந்ததனை விடவும் 14 மணித்தியாலங்கள் தாமதமாகவே பயண இலக்கினை சென்றடைந்ததாக அபுசாயிட் தெரிவித்துள்ளார்.
வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
லண்டனில் வாழும் ரஷ்ய இளம்பெண் ஒருவர் வீட்டின் முன், ’
இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தமா
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை
நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அர
இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்
