தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீனாவின் 30 போர் விமானங்கள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தைவான் சுட்டி காட்டியதால், இந்த ஆண்டு தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா தனது இரண்டாவது பெரிய ஊடுருவலை செய்துள்ளது.
தைவான் தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் தென்மேற்கு பகுதிக்குள் சீனா அனுப்பிய 30 போர் விமானங்களை எச்சரித்துத் தடுப்பதற்காக தனது போர் விமானங்களை நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய வரைபடத்தின்படி, தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் ஒரு பகுதியான பிரதாஸ் தீவுகளின் வட கிழக்கே ஒரு பகுதியில் சீன விமானம் பறந்தது.
சமீபத்திய ஊடுருவலில் 22 போர் விமானங்கள், மின்னணு போர்முறைக்கான கருவிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் ஆகியவை பங்கேற்றதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை தைவான் மீது சீனா படையெடுக்கக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden)சீனாவை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.
அதே நாளில் அமெரிக்க அதிகாரி ஒருவர் தைவான் தலைவர்களுடன் பாதுகாப்பு குறித்துக் கலந்தாலோசிக்க அந்நாட்டிற்கு சென்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி
மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது
சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயல
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜ
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத
போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக
