தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீனாவின் 30 போர் விமானங்கள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தைவான் சுட்டி காட்டியதால், இந்த ஆண்டு தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா தனது இரண்டாவது பெரிய ஊடுருவலை செய்துள்ளது.
தைவான் தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் தென்மேற்கு பகுதிக்குள் சீனா அனுப்பிய 30 போர் விமானங்களை எச்சரித்துத் தடுப்பதற்காக தனது போர் விமானங்களை நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய வரைபடத்தின்படி, தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் ஒரு பகுதியான பிரதாஸ் தீவுகளின் வட கிழக்கே ஒரு பகுதியில் சீன விமானம் பறந்தது.
சமீபத்திய ஊடுருவலில் 22 போர் விமானங்கள், மின்னணு போர்முறைக்கான கருவிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் ஆகியவை பங்கேற்றதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை தைவான் மீது சீனா படையெடுக்கக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden)சீனாவை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.
அதே நாளில் அமெரிக்க அதிகாரி ஒருவர் தைவான் தலைவர்களுடன் பாதுகாப்பு குறித்துக் கலந்தாலோசிக்க அந்நாட்டிற்கு சென்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர
மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இதன் தலைநகரான கவுதமாலா
சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக
வளைகுடா நாடான குவைத்தின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக
பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்
ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர்