பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்து வரும் நிலையில், 2021 ஆம் ஆண்டு இறுதி வரை பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்த வேண்டிய 5 ஆயிரத்து 641 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அமைச்சரவை பத்திரத்தை கடந்த 30 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வியத்புர வீடமைப்பு தொகுதியில் உள்ள வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களாக வழங்குவதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மே 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்களில் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை வழங்குதற்கான மானியத்தை ஒதுக்குவதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்பட்டது.
இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 6 ஆயிரத்து 141 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அதில் 500 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்க
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகி
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்ப
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்க
பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத
இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க
