பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்து வரும் நிலையில், 2021 ஆம் ஆண்டு இறுதி வரை பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்த வேண்டிய 5 ஆயிரத்து 641 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அமைச்சரவை பத்திரத்தை கடந்த 30 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வியத்புர வீடமைப்பு தொகுதியில் உள்ள வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களாக வழங்குவதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மே 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்களில் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை வழங்குதற்கான மானியத்தை ஒதுக்குவதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்பட்டது.
இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 6 ஆயிரத்து 141 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அதில் 500 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில
நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்
காலி - கோணபினுவல பிரதேசத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்த
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ
இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள், நாடு நன்றாக இருந்த
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்
