அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்சினோ வைத்தியசாலை மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் அபாயநிலையில் இருப்பதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் நிக்கோலஸ் பிராங்கே உறுதிப்படுத்தியுள்ளார்.

Ventura Boulevard 16200 பிளாக்கில் உள்ள வைத்தியசாலைக்கு பிற்பகல் 3:50 மணிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் டிரேக் மேடிசன் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் வைத்தியர் ஒருவர் இரண்டு செவிலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், பாதிக்கப்பட்டவர்களின் உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

சந்தேக நபர், கத்தியுடன் வைத்தியசாலையில் உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டதுடன், வைத்தியசாலை கட்டிடத்தின் சில பகுதிகளில் இருந்து மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நி
உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு
ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்
உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படு
சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப
