லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை நேற்றைய தினம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லிட்ரோ நிறுவனமும் எரிவாயு விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே லிட்ரோ நிறுவனம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடையுள்ள வீட்டு சமையல் பாவனைக்கான எரிவாயு நாளை மறுதினம் வரை விநியோகிக்கப்பட மாட்டாது என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கையில் போதிய கையிருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு கொண்டு வரும் சரக்குக் கப்பல் விரைவில் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல
பாண், பனிஸ் போன்ற பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை
சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி
நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த
திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால
