அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்த போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கு பல குழுக்களைக் கொண்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல குழுக்கள் அனுப்பட்டபோதும், சி.ஐ.டி.யினரால் இதுவரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரைக் கண்டுபிடிக்க பல காவல்துறை குழுக்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரின் பெயரை சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹிந்த கஹந்தகமவை ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்ப
பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்க
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்க
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
உலகநாயகன் கமல
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டு
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங
