நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் செல்வந்தர்கள் பெருமளவு நெல்லை கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பரவி வரும் வதந்திகள் காரணமாக இவ்வாறு நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திஸ்ஸமஹாராம, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம் மற்றும் புத்தள போன்ற பிரதேசங்களில் இவ்வாறு கூடுதல் தொகைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல் 165 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கொழும்பைச் சேர்ந்த செல்வந்தர்கள் இவ்வாறு கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயறு, கௌபி போன்ற தானியங்களின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் அவற்றையும் செல்வந்தர்கள் களஞ்சியப்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமஹாரம, ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளின் கிராமங்களில் செல்வந்தர்கள் சஞ்சரிப்பதனை காண முடியும் எனவும், அவர்கள் இவ்வாறு கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உ
கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்த
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா
தொலைபேசி நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் தொலைபேசி கட
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி
அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழ
உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
