எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்ற இறக்கமான எரிவாயு விலை மற்றும் டொலரை கருத்தில் கொண்டு விலை சூத்திரமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை உயர்வினால் ஏற்பட்ட நட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் செலுத்த வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவதால், எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றங்களை அந்த நுகர்வோர் மட்டுமே ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படாமையால், கடந்த 8ஆம் திகதி இலங்கை வந்திறங்கிய கப்பலில் நேற்றும் எரிவாயுவை இறக்க முடியவில்லை.

இதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று சந்தைக்கு வெளியிடப்போவதில்லை என லிட்ரோ தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்காக பொது மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிற்றோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர். கடந்த நாட்களில் எரிவாயு கிடைக்காமையினால் போராட்டங்களில் மக்கள் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின
ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
வல்வட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கில
சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறி
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போத
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நி
