எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்ற இறக்கமான எரிவாயு விலை மற்றும் டொலரை கருத்தில் கொண்டு விலை சூத்திரமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை உயர்வினால் ஏற்பட்ட நட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் செலுத்த வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவதால், எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றங்களை அந்த நுகர்வோர் மட்டுமே ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படாமையால், கடந்த 8ஆம் திகதி இலங்கை வந்திறங்கிய கப்பலில் நேற்றும் எரிவாயுவை இறக்க முடியவில்லை.

இதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று சந்தைக்கு வெளியிடப்போவதில்லை என லிட்ரோ தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்காக பொது மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிற்றோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர். கடந்த நாட்களில் எரிவாயு கிடைக்காமையினால் போராட்டங்களில் மக்கள் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலை
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவி
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று க
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச
முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
