விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து முறைகேடாக நீர் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர் மின் உற்பத்தி நிலையங்களான விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து மின் உற்பத்தி இயந்திரங்களுக்குள் செலுத்தப்படாத நிலையில் சுமார் இரண்டு மணிநேரம் நீர் வெளியேற்றப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதாயின் அதற்கான செயலகத்தின் அனுமதி முன்கூட்டியே பெறப்பட வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால் கடந்த நாட்களில் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்வெளியேற்றப்பட்டபோது அவ்வாறான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்று தெரவிக்கப்படுகின்றது.

மின்சார உற்பத்தியில் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் குழப்பவாதிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
அதன் அடிப்படையில் தற்போது இரண்டு பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நீர்த்தேக்கங்களை பார்வையிட்டு அதன் பின்னர் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைய
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ
பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொ
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால
மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவர
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த
