நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும், வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம், தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சனிக்கிழமை மாலை 06 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 06 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.
காலையில் இடம்பெற வேண்டிய ரயில் சேவைகள் மற்றும் தூர இடங்களில் இருந்து இடம்பெறவேண்டிய பஸ் சேவைகள் இடம்பெறவில்லை. இதனால், அதிகாலையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.
பிரதான நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் காலைவேளையில் திறக்கப்படவில்லை. சில பஸ் நிலையங்களில் பயணிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அமைதி, பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவன
இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குற
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின்
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கை
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வி
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற
