இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு குழந்தைகளுடன் தம்பதி ஒருவர் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கு உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற்றத்தை கண்டுள்ளது. இலங்கையில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது, இதனால் பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல கடைகள் பொருட்கள் இல்லாமல் காலியாகவே காட்சியளிக்கிறது. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு பெட்ரோல் பங்குகளிலும் தவித்து வருகின்றனர். பொருட்களின் விலையும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில் தமிழர்கள் 4 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். ஆபத்தான முறையில் இரண்டு குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்த பெற்றோரிடம் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு குடும்பங்களாக 16 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சம் அடைந்த நிலையில், மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததன் மூலம், தமிழகம் வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் ப
ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனி
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர
கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று குறைந்ததை
பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ
பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோ
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர
சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர
கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு
தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூட
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல
