சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா அமெரிக்கா இடையிலான விரிவான மற்றும் உலகளாவிய கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லியாட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஆகியோருடன் இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் வெளிவிவகார மந்திரி எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் ஏப்ரல் 11 ஆம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரமான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த பேச்சுவார்த்தை உறுதிப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இரு நாட்டு உறவுகள், தொழில்நுட்பம், கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றை இந்த பேச்சுவார்த்தை மேலும் மேம்படுத்தும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் வாஷிங்டன் செல்ல உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்லும் இருவரும், அங்கு நடைபெறும் இந்தியா-ஜப்பான் இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையிலும் பங்கேற்கின்றனர்.
அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இட
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவி
ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது
நீண்ட தேர்தல் நடைமுறைதான் மேற்கு வங்காள கிராமப்புற பக
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்ச
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி
டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட
