இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங்கள் நிறைந்த பகுதியில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இச்சிலோவ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரைச் சுற்றி பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அவசர சேவை தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும்
பாலஸ்தீனியர்களின் அண்மை கால தாக்குதல்களின் தொடர்ச்சியாக இது கருதப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் அங்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டனர். இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் இஸ்ரேலிய ராணுவ தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.\
இஸ்ரேலில் நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்த உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும், பயங்கரவாதம் மற்றும் வன்முறையை எதிர்கொள்வதில் அமெரிக்கா உறுதியாக நிற்பதாகவும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிரு
உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய
மெக்சிகோ நாட்டின் குரேரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகர
ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தல
மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்ச
இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந
உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்ன
உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொ
இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்
கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி பே
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
உலக அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உ
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட
