இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கு தனது அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்று உறுதியளிக்கிறேன்.
மக்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும், தெருக்களில் மக்கள் நடத்தும் போராட்டங்களால் ஒவ்வொரு நிமிடமும் இலங்கை விலைமதிப்பற்ற வரவை இழக்கிறது.
எனது குடும்பம் மீது அவதூறு பரப்பப்படுகிறது, அதனை நான் பொறுத்துக் கொள்கிறேன். 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புமாறு போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். பாராளுமன்றத்தை நிராகரிப்பது ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக அந்நாட்டு முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச , அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் காரணமாக மக்களின் வாழ்க்கை மோசமாகி உள்ளதாக
தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளை நிறைவேற்ற அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அவரது அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குண
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி
சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா
ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில்
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த
