நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார். அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும் இதுவரை நெருங்க முடியவில்லை. நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள படங்கள் வசூலிலும் சக்கை போடு போடுகின்றன. இதனால், நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிகபட்சம் ரூ.3 கோடி என்று இருந்தது. பின்னர் அது ரூ.5 கோடியாக உயர்ந்தது.
இந்நிலையில், தற்போது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்குத்தான் அவர் ரூ.10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது.
படத்தில் நடிக்க நயன்தாரா 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கே இவ்வளவு சம்பளம் என்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனாலும், படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே, தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியும், நயன்தாராவும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று
1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாப
பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வர
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் பாடல் தான் அரபிக்
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி,
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண
தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண
நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் க
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப
