மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள மோமாரி கிராம பஞ்சாயத்து பகுதியை புயல் தாக்கியது.
சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்த நிலையில், இரண்டு பேர் உயிரிழந்தனர். குறைந்தது 50 பேர் காயமடைந்ததாக கூச் பெஹார் நகராட்சித் தலைவர் ரவீந்திர நாத் கோஷ் தெரிவித்துள்ளார்.
டூஃபங்கஞ்ச், மாதபங்கா உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளும் புயலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேபோல் மிசோரம் மாநிலம் கோலாசிப் மற்றும் மமித் மாவட்டங்களில் புயல் தாக்கியது. இதனால் பெய்த கனமழை காரணமாக தேவாலய கட்டிடம் உட்பட 200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அம்மாநில மந்திரி லால்ரின்லியானா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
அசாம் மாநிலத்தில் புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்தன.
ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் தரையில் சாய்ந்தன. புயலுக்கு டின்சுகியா, பக்சா, திப்ருகார் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ
இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன்
கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தி
அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்ட
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்ட
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக
நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட
‘நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல.
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
